பராசக்தி பட வெளியீட்டுக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரிக்கிறது.அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இருவரும் இணையும் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்திற்கு சேயோன் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தை இயக்கும் இயக்குனர் பெயர் பிரசாந்த் முருகேசன்.இவர் இதற்கு முன் தாய்கிழவி என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சேயோன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்த ஆண்டு அக்டோபர் மாத வெளியீடாக கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment